ஸ்வயமேவாத்1மனாத்1மானம் வேத்1த1 த்1வம் பு1ருஷோத்1த1ம |
பூ4தபா4வன பூ4தே1ஶ தே3வதே3வ ஜக3த்1ப1தே1 ||15||
ஸ்வயம்--—நீங்களே; ஏவ--—மட்டுமே; ஆத்மனா--—தன்னால்; ஆத்மானம்—--உங்களை; வேத்த—--அறிவீர்கள்; த்வம்—--நீ; புருஷ-உத்தம—--சிறந்த ஆளுமை; பூத-பாவன—-அனைத்து உயிரினங்களையும் படைத்தவர்; பூத-ஈ ஶ —--எல்லாவற்றின் இறைவன்; தேவ-தேவ—--தேவர்களின் கடவுள்; ஜகத்-பதே----பிரபஞ்சத்தின் இறைவன்
BG 10.15: உண்மையில், உன்னதமான ஆளுமையே, அனைத்து உயிரினங்களின் படைப்பாளி மற்றும் இறைவனே, கடவுள்களின் கடவுளே, மற்றும் பிரபஞ்சத்தின் இறைவனே, உங்களது நினைத்தும் பார்க்க இயலாத ஆற்றலால், நீங்கள் மட்டுமே உங்களை அறிவீர்கள்!
Start your day with a nugget of timeless inspiring wisdom from the Holy Bhagavad Gita delivered straight to your email!
ஸ்ரீ கிருஷ்ணரை ஒப்புயர்வற்ற தெய்வீக ஆளுமை என்பதை வலியுறுத்தும் வகையில் கீழ் வருமாறு அவரை அர்ஜுனன் குறிப்பிடுகிறார்:
பூ4த1-பா4வன அனைத்து உயிரினங்களையும் படைத்தவர், பிரபஞ்சத்தின் தந்தை
பூ4தே1ஷ்: உன்னதமான கட்டுப்பாட்டாளர், அனைத்து உயிரினங்களின் இறைவன்
ஜக3த்1-ப1தே1: படைப்பின் இறைவன் மற்றும் எஜமானர்.
தே3வ-தே3வ: அனைத்து வான கடவுள்களின் கடவுள்
ஶ்வேதா1ஶ்வத1ர உப1நிஷத3மும் இதே உண்மையை அறிவிக்கிறது:
யஸ்மாத்1 ப1ரம் நாப1ரமஸ்தி1 கி1ஞ்சி1த்3 (3.9)
‘கடவுளை ஒருபொழுதும் மிஞ்ச முடியாது; அவர் எல்லாவற்றிற்கும் அப்பாற்பட்டவர்’.
முந்தைய வசனம் கடவுளை யாராலும் அறிய முடியாது என்று கூறியது. இது தெளிவாக தர்க்கரீதியானது. அனைத்து ஆன்மாக்களும் வரையறுக்கப்பட்ட புத்தியைக் கொண்டிருக்கின்றன, அதே சமயம் கடவுள் எல்லையற்றவர், எனவே, அவர் அவர்களின் அறிவுக்கு எட்டாதவர். இது அவரை சிறுமைப்படுத்தாது; மாறாக, அது அவரை உயர்த்துகிறது. மேற்கத்திய தத்துவஞானி எப்.ஏ.ஜேக்கபி கூறினார்: நம்மால் அறிய முடிகிற கடவுள் கடவுளாக இருக்க முடியாது.' இருப்பினும், இந்த வசனத்தில், அர்ஜுனன், கடவுளை அறிந்த ஒரு ஆளுமை உள்ளது, அதுவே கடவுள் என்று கூறுகிறார். எனவே, ஸ்ரீ கிருஷ்ணர் மட்டுமே தன்னை அறிந்திருக்கிறார், மேலும் அவர் தனது சக்திகளை ஒரு ஆன்மாவுக்கு வழங்க முடிவு செய்தால், அந்த அதிர்ஷ்டசாலி ஆன்மாவும் அவரை அறியும்.